குறள்: 564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும்.

'Ah! cruel is our king', where subjects sadly say,His age shall dwindle, swift his joy of life decay

மு.வரதராசன் உரை

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

கலைஞர் உரை

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்

Explanation

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened

Kural Info

குறள் எண்:564
Category:பொருட்பால்
அதிகாரம்:வெருவந்த செய்யாமை
இயல்:அரசியல்