குறள்: 569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.

Who builds no fort whence he may foe defy,In time of war shall fear and swiftly die

மு.வரதராசன் உரை

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

கலைஞர் உரை

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்

Explanation

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish

Kural Info

குறள் எண்:569
Category:பொருட்பால்
அதிகாரம்:வெருவந்த செய்யாமை
இயல்:அரசியல்