குறள்: 652என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை.

From action evermore thyself restrainOf glory and of good that yields no gain

மு.வரதராசன் உரை

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

கலைஞர் உரை

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்

Explanation

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)

Kural Info

குறள் எண்:652
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத் தூய்மை
இயல்:அமைச்சியல்