குறள்: 655எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.

Do nought that soul repenting must deplore,If thou hast sinned, 'tis well if thou dost sin no more

மு.வரதராசன் உரை

பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை

என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

கலைஞர் உரை

`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று

Explanation

Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not

Kural Info

குறள் எண்:655
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத் தூய்மை
இயல்:அமைச்சியல்