குறள்: 656ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் கசான்றோர் பழிக்கும் வினை.

Though her that bore thee hung'ring thou behold, no deedDo thou, that men of perfect soul have crime decreed

மு.வரதராசன் உரை

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

கலைஞர் உரை

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது

Explanation

Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)

Kural Info

குறள் எண்:656
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத் தூய்மை
இயல்:அமைச்சியல்