குறள்: 657பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை.

Than store of wealth guilt-laden souls obtain,The sorest poverty of perfect soul is richer gain

மு.வரதராசன் உரை

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை

பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

கலைஞர் உரை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

Explanation

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful

Kural Info

குறள் எண்:657
Category:பொருட்பால்
அதிகாரம்:வினைத் தூய்மை
இயல்:அமைச்சியல்