மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 691அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

குறள்: 692மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும்.

குறள்: 693போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது.

குறள்: 694செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.

குறள்: 695எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை.

குறள்: 696குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல்.

குறள்: 697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்.

குறள்: 698இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும்.

குறள்: 699கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்.

குறள்: 700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்.