நாடு

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.

குறள்: 732பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.

குறள்: 733பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.

குறள்: 734உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு.

குறள்: 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு.

குறள்: 736கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை.

குறள்: 737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

குறள்: 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து.

குறள்: 739நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.

குறள்: 740ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.