நட்பாராய்தல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 791நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு.

குறள்: 792ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்.

குறள்: 793குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.

குறள்: 794குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

குறள்: 795அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

குறள்: 796கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.

குறள்: 797ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.

குறள்: 798உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

குறள்: 799கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.

குறள்: 800மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.