புணர்ச்சி விதும்பல்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 1281உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

குறள்: 1282தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்காமம் நிறைய வரின்.

குறள்: 1283பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.

குறள்: 1284ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றது என் னெஞ்சு.

குறள்: 1285எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.

குறள்: 1286காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.

குறள்: 1287உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.

குறள்: 1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.

குறள்: 1289மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.

குறள்: 1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.