மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
குறள்: 682அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று.
குறள்: 683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.
குறள்: 684அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.
குறள்: 685தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது.
குறள்: 686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது.
குறள்: 687கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை.
குறள்: 688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.
குறள்: 689விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்கணவன்.
குறள்: 690இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் குஉறுதி பயப்பதாம் தூது.