குறள்: 689விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்கணவன்.

His faltering lips must utter no unworthy thing,Who stands, with steady eye, to speak the mandates of his king

மு.வரதராசன் உரை

குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

சாலமன் பாப்பையா உரை

தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

கலைஞர் உரை

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்

Explanation

He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter)

Kural Info

குறள் எண்:689
Category:பொருட்பால்
அதிகாரம்:தூது
இயல்:அமைச்சியல்