குறள்: 73அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு.

Of precious soul with body's flesh and bone,The union yields one fruit, the life of love alone

மு.வரதராசன் உரை

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்

கலைஞர் உரை

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்

Explanation

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

Kural Info

குறள் எண்:73
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அன்புடைமை
இயல்:இல்லறவியல்