அன்புடைமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 71அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.

குறள்: 72அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.

குறள்: 73அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு.

குறள்: 74அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

குறள்: 75அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.

குறள்: 76அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.

குறள்: 77என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.

குறள்: 78அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.

குறள்: 79புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

குறள்: 80அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.