குறள்: 77என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.

As sun's fierce ray dries up the boneless things,So loveless beings virtue's power to nothing brings

மு.வரதராசன் உரை

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

கலைஞர் உரை

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

Explanation

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms

Kural Info

குறள் எண்:77
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அன்புடைமை
இயல்:இல்லறவியல்