குறள்: 78அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.

The loveless soul, the very joys of life may know,When flowers, in barren soil, on sapless trees, shall blow

மு.வரதராசன் உரை

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

கலைஞர் உரை

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது

Explanation

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert

Kural Info

குறள் எண்:78
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அன்புடைமை
இயல்:இல்லறவியல்