குறள்: 31சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.

It yields distinction, yields prosperity; what gainGreater than virtue can a living man obtain

மு.வரதராசன் உரை

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

சாலமன் பாப்பையா உரை

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

கலைஞர் உரை

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Explanation

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

Kural Info

குறள் எண்:31
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அறன் வலியுறுத்தல்
இயல்:பாயிரவியல்