மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 31சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.
குறள்: 32அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.
குறள்: 33ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்.
குறள்: 34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற.
குறள்: 35அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம்.
குறள்: 36அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.
குறள்: 37அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
குறள்: 38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்.
குறள்: 39அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்புறத்த புகழும் இல.
குறள்: 40செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.