குறள்: 34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற.
Spotless be thou in mind! This only merits virtue's name;All else, mere pomp of idle sound, no real worth can claim
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show
| குறள் எண்: | 34 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அறன் வலியுறுத்தல் |
| இயல்: | பாயிரவியல் |