குறள்: 129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;In soul by tongue inflamed, the ulcer healeth never more

மு.வரதராசன் உரை

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

கலைஞர் உரை

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது

Explanation

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal

Kural Info

குறள் எண்:129
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அடக்கம் உடைமை
இயல்:இல்லறவியல்