அடக்கம் உடைமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.

குறள்: 122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

குறள்: 123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின்.

குறள்: 124நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.

குறள்: 125எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.

குறள்: 126ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுநம்யும் ஏமாப் புடைத்து.

குறள்: 127யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள்: 128ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்.

குறள்: 129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.

குறள்: 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.