குறள்: 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
Who learns restraint, and guards his soul from wrath,Virtue, a timely aid, attends his path
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்
Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger
| குறள் எண்: | 130 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அடக்கம் உடைமை |
| இயல்: | இல்லறவியல் |