குறள்: 361அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.

The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring

மு.வரதராசன் உரை

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

கலைஞர் உரை

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்

Explanation

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire

Kural Info

குறள் எண்:361
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அவா அறுத்தல்
இயல்:துறவறவியல்