குறள்: 364தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.

Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow

மு.வரதராசன் உரை

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

கலைஞர் உரை

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்

Explanation

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

Kural Info

குறள் எண்:364
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அவா அறுத்தல்
இயல்:துறவறவியல்