குறள்: 368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.

Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide

மு.வரதராசன் உரை

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

சாலமன் பாப்பையா உரை

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

கலைஞர் உரை

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்

Explanation

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more

Kural Info

குறள் எண்:368
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அவா அறுத்தல்
இயல்:துறவறவியல்