குறள்: 369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.

When dies away desire, that woe of woesEv'n here the soul unceasing rapture knows

மு.வரதராசன் உரை

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

கலைஞர் உரை

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

Explanation

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed

Kural Info

குறள் எண்:369
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அவா அறுத்தல்
இயல்:துறவறவியல்