குறள்: 224இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு.

The suppliants' cry for aid yields scant delight,Until you see his face with grateful gladness bright

மு.வரதராசன் உரை

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

கலைஞர் உரை

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்

Explanation

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance

Kural Info

குறள் எண்:224
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஈகை
இயல்:இல்லறவியல்