ஈகை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 221வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.

குறள்: 222நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.

குறள்: 223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.

குறள்: 224இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு.

குறள்: 225ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.

குறள்: 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.

குறள்: 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.

குறள்: 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.

குறள்: 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.

குறள்: 230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.