குறள்: 225ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.

'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain

மு.வரதராசன் உரை

தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

சாலமன் பாப்பையா உரை

வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

கலைஞர் உரை

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

Explanation

The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)

Kural Info

குறள் எண்:225
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஈகை
இயல்:இல்லறவியல்