குறள்: 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.

Whose soul delights with hungry men to share his meal,The hand of hunger's sickness sore shall never feel

மு.வரதராசன் உரை

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

கலைஞர் உரை

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை

Explanation

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

Kural Info

குறள் எண்:227
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஈகை
இயல்:இல்லறவியல்