குறள்: 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.

They keep their garners full, for self alone the board they spread;-'Tis greater pain, be sure, than begging daily bread

மு.வரதராசன் உரை

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

கலைஞர் உரை

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது

Explanation

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more

Kural Info

குறள் எண்:229
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஈகை
இயல்:இல்லறவியல்