குறள்: 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found

மு.வரதராசன் உரை

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

கலைஞர் உரை

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

Explanation

Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech

Kural Info

குறள் எண்:94
Category:அறத்துப்பால்
அதிகாரம்:இனியவை கூறல்
இயல்:இல்லறவியல்