மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
குறள்: 92அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.
குறள்: 93முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
குறள்: 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
குறள்: 95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.
குறள்: 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்
குறள்: 97நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.
குறள்: 98சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
குறள்: 99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது?
குறள்: 100இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.