குறள்: 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்

Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow

மு.வரதராசன் உரை

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

கலைஞர் உரை

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்

Explanation

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase

Kural Info

குறள் எண்:96
Category:அறத்துப்பால்
அதிகாரம்:இனியவை கூறல்
இயல்:இல்லறவியல்