குறள்: 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.
To work no wilful woe, in any wise, through all the days,To any living soul, is virtue's highest praise
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time
| குறள் எண்: | 317 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | இன்னா செய்யாமை |
| இயல்: | துறவறவியல் |