இன்னா செய்யாமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

குறள்: 312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

குறள்: 313செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.

குறள்: 314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.

குறள்: 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.

குறள்: 316இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.

குறள்: 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.

குறள்: 318தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல்.

குறள்: 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும்.

குறள்: 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.