குறள்: 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.

The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain

மு.வரதராசன் உரை

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

கலைஞர் உரை

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

Explanation

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

Kural Info

குறள் எண்:284
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கள்ளாமை
இயல்:துறவறவியல்