மொத்தம்: 20 குறள்கள்
குறள்: 281எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
குறள்: 282உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வேம் எனல்.
குறள்: 283களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.
குறள்: 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.
குறள்: 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
குறள்: 286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.
குறள்: 287களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
குறள்: 288அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு.
குறள்: 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.
குறள்: 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு.
குறள்: 401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.
குறள்: 402கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
குறள்: 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.
குறள்: 404கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.
குறள்: 405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
குறள்: 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
குறள்: 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.
குறள்: 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட் ட திரு.
குறள்: 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.
குறள்: 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.