குறள்: 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு.

The fraudful forfeit life and being here below;Who fraud eschew the bliss of heavenly beings know

மு.வரதராசன் உரை

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

சாலமன் பாப்பையா உரை

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

கலைஞர் உரை

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

Explanation

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud

Kural Info

குறள் எண்:290
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கள்ளாமை
இயல்:துறவறவியல்