குறள்: 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.

What is the work of virtue? 'Not to kill';For 'killing' leads to every work of ill

மு.வரதராசன் உரை

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

கலைஞர் உரை

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்

Explanation

Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil

Kural Info

குறள் எண்:321
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கொல்லாமை
இயல்:துறவறவியல்