கொல்லாமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.

குறள்: 322பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

குறள்: 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.

குறள்: 324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.

குறள்: 325நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.

குறள்: 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.

குறள்: 327தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை.

குறள்: 328நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.

குறள்: 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.

குறள்: 330உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.