குறள்: 327தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை.
Though thine own life for that spared life the price must pay,Take not from aught that lives gift of sweet life away
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life
| குறள் எண்: | 327 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கொல்லாமை |
| இயல்: | துறவறவியல் |