குறள்: 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.
Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
| குறள் எண்: | 333 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நிலையாமை |
| இயல்: | துறவறவியல் |