குறள்: 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.

Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ

மு.வரதராசன் உரை

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

கலைஞர் உரை

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்

Explanation

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable

Kural Info

குறள் எண்:333
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நிலையாமை
இயல்:துறவறவியல்