மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 331நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.
குறள்: 332கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.
குறள்: 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.
குறள்: 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்வாளது உணர்வார்ப் பெறின்.
குறள்: 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்
குறள்: 336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.
குறள்: 337ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல.
குறள்: 338குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு.
குறள்: 339உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
குறள்: 340புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு.