குறள்: 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death

மு.வரதராசன் உரை

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

கலைஞர் உரை

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்

Explanation

Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

Kural Info

குறள் எண்:335
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நிலையாமை
இயல்:துறவறவியல்