குறள்: 336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.

Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world

மு.வரதராசன் உரை

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

சாலமன் பாப்பையா உரை

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

கலைஞர் உரை

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்

Explanation

This world possesses the greatness that one who yesterday was is not today

Kural Info

குறள் எண்:336
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நிலையாமை
இயல்:துறவறவியல்