குறள்: 338குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு.
Birds fly away, and leave the nest deserted bare;Such is the short-lived friendship soul and body share
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty
| குறள் எண்: | 338 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நிலையாமை |
| இயல்: | துறவறவியல் |