குறள்: 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.

The fate that loss ordains makes wise men's wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless

மு.வரதராசன் உரை

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

கலைஞர் உரை

அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்

Explanation

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge

Kural Info

குறள் எண்:372
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஊழ்
இயல்:ஊழியல்