ஊழ்

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.

குறள்: 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.

குறள்: 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.

குறள்: 374இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.

குறள்: 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.

குறள்: 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.

குறள்: 377வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

குறள்: 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.

குறள்: 379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்?

குறள்: 380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.