குறள்: 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.

In subtle learning manifold though versed man be,'The wisdom, truly his, will gain supremacy

மு.வரதராசன் உரை

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை

பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)

கலைஞர் உரை

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்

Explanation

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail

Kural Info

குறள் எண்:373
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஊழ்
இயல்:ஊழியல்